/* */

இலவச வாஷிங்மெஷின் அறிவிப்பு-சரத்குமார் கிண்டல்

இலவச வாஷிங்மெஷின் அறிவிப்பு-சரத்குமார் கிண்டல்
X

இலவசமாக வாஷிங்மெஷின் தருகிறேன் என்பவர்களிடம் இலவச சலவை பவுடரையும் கேளுங்கள் என தேனியில் சரத்குமார் கிண்டலாக பேசினார்.

சமக கட்சி தலைவர் சரத்குமார் இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். மக்கள் நீதி மையம் கூட்டணி சார்பில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பாண்டியராஜனை ஆதரித்து தேனி அல்லிநகரம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் அவர் தேர்தல் பரப்புரை செய்தார்.முன்னதாக பெரியகுளத்தில் பேசிய சரத்குமார், அடிப்படை சுகாதாரத்தைக்கூட சரியாக செய்யாமல் உள்ளது திராவிட கட்சிகளின் நிலை. திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பல இடங்களில் காவல்துறை அதிகாரிகளை பார்த்து ஆட்சிக்கு வந்ததும் உங்களை பார்த்துக்கொள்கிறேன் என மிரட்டி வருவதாக குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து தேனி அல்லிநகரத்தில் பரப்புரை செய்த சரத்குமார், இலவச திட்டங்கள் வழங்கி உழைப்பவர்களை வேலை செய்யவிடாமல் கெடுக்கிறார்கள். இலவச வாஷிங்மெஷின் தருவதாக கூறுகிறார்கள், அதற்கான மின் கட்டணம் மற்றும் இலவச சலவை பவுடரையும் கேளுங்கள். சாதாரணமாகவே துணி துவைத்தால் தான் உடலுக்கு நல்லது. இதில் 2 கிமீ தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வந்து இவர்கள் தரும் வாஷிங்மெஷினில் ஊற்றி துணி துவைக்க வேண்டுமா? என அதிமுக தேர்தல் அறிவிப்பை கிண்டல் செய்தார்.

Updated On: 2 April 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!