/* */

வராகநதியில் வெள்ளப்பெருக்கு பெரியகுளம் மக்களுக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் மலையடிவாரப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெரியகுளம் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வராகநதியில் வெள்ளப்பெருக்கு  பெரியகுளம் மக்களுக்கு எச்சரிக்கை
X

பெரியகுளம் நகரின் மையத்தில் செல்லும் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் வராகநதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியகுளம் நகராட்சி. இங்கு பெய்து வரும் பலத்த மழையால் சோத்துப்பாறை அணை நிறைந்து விநாடிக்கு தொள்ளாயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதர பகுதிகளில் இருந்து வரும் மழை நீரும் சேர்ந்து வராகநதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ இதர பயன்பாட்டிற்காகவே ஆற்றுக்குள் எக்காரணம் கொண்டும் இறங்க வேண்டாம். வெள்ளம் வடியும் வரை மக்கள் பாதுகாப்பான வாழ்வியல்முறைகளை மேற்கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மற்றும் வாகன ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Updated On: 17 Nov 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்