/* */

பெரியகுளம் அருகே மின்வாரிய ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மின்சாரம் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் அபகரித்துக் கொள்ளும் உள்நோக்கத்துடன் புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் மத்தியஅரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

பெரியகுளம் அருகே மின்வாரிய ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
X

புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து பெரியகுளம் கோட்டம் ஜெயமங்கலம் பிரிவு அலுவலக மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு மின் வாரிய தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பாக பெரியகுளம் கோட்டம் ஜெயமங்கலம் பிரிவு அலுவலகத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்.பி.எப்., நிர்வாகி செல்வக்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மாரிமுத்து, முபாரக், பாண்டி உட்பட ஏராளமான மின்துறை பங்கேற்றனர்.

மாநில உரிமைகளை முழுமையாகப் பறிக்கும் விதத்திலும் பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரம் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே அபகரித்துக் கொள்ளும் உள்நோக்கத்துடனும் 2020 ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்தும்,அரசைக் கண்டித்து

2014, 2018 ஆகிய ஆண்டுகளில் முயற்சி செய்து தோற்றுப் போன இந்தத் திருத்தச் சட்டத்தை, மாநிலங்கள் எல்லாம் கொரோனா நோய்த் தொற்று பேரிடரைச் சமாளிக்கும் உயிர்காக்கும் முயற்சியில் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கொண்டு வந்து கருத்துக் கேட்பது மிகுந்த கவலையளிக்கிறது.

கொரோனாவிலிருந்து மனித உயிர்களைக் காக்கும் முயற்சிகள் குறித்தோ, ஸ்தம்பித்து மூச்சுத் திணறி - ஊசலாடிக் கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியோ, கிஞ்சித்தும் கவலைப்படாமல் அதிகாரப் பசியில் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசு முயற்சிப்பது சுமூகமான மத்திய - மாநில உறவுகளை அடியோடு வெறுக்கும் செயல் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்.


Updated On: 19 July 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்