/* */

ஆ.ராசா புகைப்படத்தை எரித்து அதிமுக சாலை மறியல்

ஆ.ராசா புகைப்படத்தை  எரித்து அதிமுக சாலை மறியல்
X

பெரியகுளத்தில் திமுகவை சேர்ந்த ஆ.ராசாவின் புகைப்படத்தை தீயிட்டு எரித்து அதிமுகவினர் சாலை மறியல் செய்தனர்.

திமுக துணைப் பொதுசெயலாளர் ஆ.ராசா அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுகவினர் இன்று ஆ.ராசா புகைப்படத்தை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரியகுளம் தென்கரையில் உள்ள காந்திசிலை முன்பாக கூடிய சுமார் நூற்றுக்கணக்கான அதிமுகவினர், ஆ.ராசாவின் புகைப்படத்தை துடைப்பம், செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதற்காக அவரது பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடியிருந்தவர்களை கலைத்தனர்.இதனால் திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

Updated On: 29 March 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்