/* */

மனைவியின் தவறான உறவை கண்டித்த கணவனுக்கு கத்திக்குத்து

மனைவியின் தவறான உறவை கண்டித்த கணவனுக்கு கத்திக்குத்து
X

பெரியகுளத்தில் மனைவியின் தவறான உறவை தட்டிக்கேட்ட கணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(55). இவரது மனைவியான மீனா (45)வுக்கு பெரியகுளம் யோகபாலன்(19), தங்கப்பாண்டி ஆகிய இரண்டு இளைஞர்களுடன் முறையற்ற பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது தொடர்பை அறிந்த முருகன், தனது மனைவி உள்பட மூவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு இளைஞர்களும், முருகனை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த சில நாட்களாக பின் தொடர்ந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகனை, பின்தொடர்ந்த யோகபாலன், தங்கப்பாண்டி தனது நண்பர்கள் சின்னமணி(19), ரத்தினமுத்து(19) மற்றும் மாரியப்பன் (எ) சூர்யா(21) ஆகியோரது உதவியுடன் பாட்டிலால் தலையில் அடித்தும், கத்தியால் கழுத்தில் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியாக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர், யோகபாலன், சின்னமணி, ரத்தினமுத்து மற்றும் மாரியப்பன் (எ) சூர்யா ஆகிய 4பேரை இன்று கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தங்கப்பாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 7 Feb 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்