/* */

கோவிலை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

கோவிலை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு
X

பெரியகுளம் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம் பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே இருந்த காளியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த 10 பவுன் நகை, 5 கிலோவில் ஐம்பொன்னால் ஆன சிலையின் முக உருவம் மற்றும் இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த உண்டியல் என அனைத்தையும் இரவில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இன்று காலையில் கோவிலின் பூசாரி பூஜைக்காக வந்த போது கோவிலின் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டு சிலையில் இருந்த நகை, ஐம்பொன் உருவம் மற்றும் உண்டியல் திருடப்பட்டுள்ளதை பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியினை மேற்கொள்ளாததால் தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் கொள்ளைச்சம்பவங்கள் நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 6 Feb 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...