/* */

நடுப்பகுதியிலிருந்து பூத்து காய்த்துள்ள வாழை மரம்

இயற்கையாக வாழை மரத்தின் நுனிப்பகுதியில் இருந்து வாழைத்தார் பூத்து காய்க்கும். ஆனால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இயற்கைக்கு மாறாக வாழை மரத்தின் நடுப்பகுதியில் இருந்து வாழைத்தார் பூத்து காய்த்தது அனைவரையும் ஆச்சரிய பட வைத்தது.

HIGHLIGHTS

தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை சாலையில் பெரியக்காநகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயா. இவரது கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிடவே இவர் கூலி வேலைக்குச் சென்று தனது குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் விஜயா ஒரு நாள் கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது சாலையோரம் யாருக்கும் வேண்டாம் என தூக்கி எறியப்பட்ட நிலையில் வாழை கன்று ஒன்று கிடந்தது.

சாலையோரம் கிடந்த அந்த வாழைத் கன்றை எடுத்து வந்து தனது வீட்டின் முன்பு உள்ள தோட்டத்தில் நட்டு வைத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் நன்றாக வளர்ந்து வந்த வாழைமரம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வாழையில் நடுப்பகுதியிலிருந்து குலை தள்ளியுள்ளது. இயற்கையில் வாழை மரத்தின் நுனிப்பகுதியில் வாழைத்தார் வருவது வழக்கம். ஆனால் இயற்கைக்கு மாறாக வாழை மரத்தின் நடுப்பகுதியில் இருந்து வாழைத்தார் வந்திருப்பது விஜயாவிற்கு ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இத்தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வாழை மரத்தின் நடுப்பகுதியிலிருந்து வாழைத் தார் வந்திருப்பதைப்பார்த்து அதிசய வாழைத்தார் என்று கூறி வருகின்றனர்.

இத்தகவல் பரவவே வாழைத்தாரை காண்பதற்காக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதனால் சாலையோரத்தில் அனாதையாய் கிடந்த வாழைக்கன்று ஒன்றை எடுத்துவந்து தனது வீட்டின் முன்பு உள்ள தோட்டத்தில் நட்டு வைத்து அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக விஜயா கூறுகிறார்.

Updated On: 29 Dec 2020 12:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி