/* */

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

மதுரை கூட்டு்க்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கூடலுார் லோயர்கேம்ப்பில் முல்லைப்பெரியாற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து அங்கிருந்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல 1300 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடக்கிறது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும். தவிர திட்டம் தொடங்கும் இடத்தில் நுாறு ஆண்டுகளுக்கு மேல் சலவைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தும் சலவை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கூட்டுக்குடிநீர் திட்டத்தை வைகை அணையில் இருந்து செயல்படுத்த வேண்டும் என சலவைத்தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையினை வலியுறுத்தி ஏற்கனவே முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தினரும், பாரதீய கிஷான் விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து இன்று கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் மதுரை குடிநீர் திட்டத்தை மாற்று வழிகளில் செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர். தங்கள் சமூகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சலவை தொழிலாளர்களும் கலெக்டரிடம் கொடுத்தனர்.

Updated On: 16 May 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  2. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  4. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  5. சேலம்
    மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  6. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்