Begin typing your search above and press return to search.
சிறை செல்லாமல் சொகுசு வாழ்க்கை கொலை குற்றவாளி மீண்டும் கைது
கொலை வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பின்னரும் சிறை செல்லாமல் வெளியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கூடலுாரில் கடந்த 2012ம் ஆண்டு கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடுவதில் நடந்த தகராறில் கொலை நடந்தது. இந்த கொலைக்குற்றவாளி லெனின், 35 கைது செய்யப்பட்டார். இவருக்கு 2015ம் ஆண்டு பெரியகுளம் கூடுதல் மாவட்ட நீதிபதி 2015ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், , 2016ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி ஏழு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த லெனின் சிறை செல்லாமல் வெளியே சுற்றி வந்தார். கூடலுார் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் பழைய பைல்களை ஆய்வு செய்து, லெனின் சிறை செல்லாமல் வெளியில் சொகுசு வாழ்க்கை வாழ்வதை கண்டறிந்தார். அவரை கடந்த 13ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தார்.