/* */

எம்.ஜி.ஆர். முயற்சி எடுத்த மதுரை குடிநீர் திட்டம் நிறைவேறாமல் போனது ஏன்?

Drinking Water Project - கேரள மாநிலம் கல்லாறில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல முயன்ற எம்.ஜி.ஆர்., போட்ட திட்டம் நிறைவேறாமல் போனது.

HIGHLIGHTS

எம்.ஜி.ஆர். முயற்சி எடுத்த  மதுரை குடிநீர் திட்டம் நிறைவேறாமல் போனது ஏன்?
X

Drinking Water Project - தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லக்கூடாது என்று பாரதீய கிஷான் சங்க தேனி மாவட்ட தலைவர் சதீஷ்பாபு மதுரை ஐகோர்ட் கிளையில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அவர் அதில் சுட்டிக்காட்டியிருந்த விஷயம், 'முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு தேவையான குடிநீரை எடுத்து விட்டால், விவசாயத்திற்கு போதாமல் போய் விடும்' என்பது தான்.

இந்த விஷயத்தில் விவசாயிகள் இன்னும் உறுதியாகவே உள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறுகையில், 'கேரள மாநிலம், கல்லாறில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முடிவு செய்திருந்தார். இதற்காக அனுமதி கேட்க அப்போதைய மதுரை மேயர் பட்டுராஜனை கேரளாவிற்கு அனுப்பி அப்போதைய கேரள முதல்வரை சந்தித்து இத்திட்டத்திற்கு அனுமதி வாங்கி வாருங்கள் என அனுப்பி வைத்தார். கோட்டயத்தில் பி.சி.சாக்கோ சிலை திறப்பு விழாவிற்கு சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு மேடையில் கேரள முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் இருக்கும் போதே, கல்லாறில் இருந்து மதுரைக்கு குடிநீர் தாருங்கள் என பேசினார். எம்.ஜி.ஆர் சில ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருந்தால் கல்லாறு- மதுரை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கலாம். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் எடுத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது.

அவரது வழிகாட்டுதல்படி ஆட்சி நடத்தியவர்கள் முந்தைய அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அவசரப்பட்டு முல்லைப்பெரியாறில் இருந்து மதுரைக்கு குடிநீர் எடுக்க 1300 கோடி ரூபாய் ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த தொடங்கி விட்டனர். இது குறித்து குறைந்தபட்சம் மக்களிடம் கருத்து கேட்பாவது நடத்தியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. முந்தைய அ.தி.மு.க., அரசு அவசர கோலத்தில் நடத்திய திட்டத்தை தி.மு.க.,வும் தொடர்கிறது. இதனால் என்னென்ன பாதிப்புகள் வர உள்ளதோ தெரியவில்லை. விவசாயிகளின் அச்சத்தை எந்த அரசுகளும் கண்டுகொள்ளவில்லை என்றார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Aug 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்