/* */

தேனி மாவட்டத்தில் திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய சாலைகள்: அச்சத்தில் பெண்கள்

போலீஸார் சிறப்பு கவனம் செலுத்தி குடிமகன்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய சாலைகள்: அச்சத்தில் பெண்கள்
X

க.விலக்கில் இருந்து  வருசைநாடு செல்லும் சாலையேரம்  அமர்ந்து மதுஅருந்தும் குடிமகன்கள் 

தேனி மாவட்டத்தில் பல முக்கிய ரோட்டோரங்கள் திறந்தவெளி மதுபாராக மாறி வருகின்றன. போலீசாரும் இதனை கண்டுகொள்வதில்லை. இதனால் பெண்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் மட்டும் 102-க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் பார்களின் எண்ணிக்கை 60க்கும் குறைவாகவே உள்ளது. பார்கள் இருக்கும். டாஸ்மாக் கடை, பார்கள் இல்லாத டாஸ்மாக் கடை என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் குடிமகன்கள் பாட்டில்களை வாங்கிக்கொண்டு, ஊரை ஒட்டிய ரோட்டோரங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பாட்டில்களையும் அங்கேயே உடைத்து போட்டு விடுகின்றனர். போதையில் நிலை தடுமாறி தகறாறிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால் சாலையோரங்களில் செல்லும் பெண்களின் மிகவும் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இது போன்றதொரு நிலைமை இந்தப்பகுதியில் மட்டும்தான் என்றில்லை. மாவட்டம் முழுவதும் பரவலாக இதே நிலைதான் காணப்படுகிறது. போலீசாரை பொறுத்தவரை, குடிமகன்கள் ஊருக்குள் தொல்லை தராமல் வெளியில் சென்று விடுகிறார்களே என்று நிம்மதியடைந்து விடுகின்றனர். ஆனால், குடிமகன்களின் தொல்லையால் பொதுமக்கள் நிம்மதி இழந்து பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்ட காவல்கண்காணிப்பாளர் இந்த பிரச்னையில் சிறப்பு கவனம் செலுத்தி குடிமகன்களின் தொல்லைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருவாரியான பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 19 Sep 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி