/* */

தேனியில் குறைந்தது தக்காளியின் விலை : தற்காலிகம் தான் என வியாபாரிகள் தகவல்

தேனி மார்க்கெட்டில் தக்காளியின் விலை இன்று குறைந்துள்ளது. இது தற்காலிகம் தான் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

தேனியில் குறைந்தது தக்காளியின் விலை :  தற்காலிகம் தான் என வியாபாரிகள் தகவல்
X

தேனி உழவர்சந்தையில் ஆர்வமுடன் தக்காளி வாங்கும் மக்கள்.

தேனியில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய் ஆக குறைந்தது. இந்த விலை குறைவு தற்காலிகம் தான் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தேனி மார்க்கெட்டில் இன்று தக்காளி முதல் ரகம் 80 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் வரை விலை குறைய காரணம் என்ன என்பது குறித்து வியாபாரிகளிடம் கேட்ட போது, 'நாமக்கல், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேற்று சந்தைக்கு வரவில்லை. அவர்கள் வந்திருந்தால் தக்காளி முழுவதையும் அவர்களே வாங்கிச் சென்றிருப்பார்கள்.

கனமழை, போக்குவரத்து செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்கள் வராததால், தேனி மாவட்டத்தில் இருந்து வேறு எந்த மார்க்கெட்டிற்கும் காய்கறி செல்லவில்லை. உள்ளூர் தேவைக்கு மட்டுமே விற்பனையானதால் விலை குறைந்தது. தக்காளி மட்டுமல்ல, அனைத்து காய்கறிகளுமே விலை குறைந்தது.

இன்று வட மாவட்ட வியாபாரிகள் வந்து விடுவார்கள். எனவே நாளையோ, நாளை மறுநாளோ மீண்டும் பழைய விலைக்கு சென்று விடும். விலை தற்காலிகமாக குறைந்த தகவல் அறிந்து தேனி மக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர் என்று கூறினர்.

Updated On: 25 Nov 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி