/* */

கேரள இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்கள் தமிழகத்துடன் இணைய ஆர்வம்

Mullaperiyar Dam Issue - கேரளாவின் இடுக்கி மாவட்ட தமிழர்கள், தமிழகத்துடன் சேர அதிக விருப்பம் காட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

கேரள இடுக்கி  மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்கள் தமிழகத்துடன் இணைய ஆர்வம்
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

Mullaperiyar Dam Issue - முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் பொய் பிரச்சாரத்திற்கு கேரள அரசு மறைமுகமாக துணை போகிறது. இந்த பொய் பிரச்சார கும்பல் முல்லைப்பெரியாறு அணை குறித்த ஒரு தவறான தகவல்களை மக்கள் மத்தியில் விதைத்து வருகிறது. இந்த பிரச்சாரக்கும்பலுக்கு கேரளாவின் பல்வேறு அமைப்புகள் நிதி உதவியும் வழங்கி வருகின்றன. இதே நிலை நீடித்தால் முல்லைப்பெரியாறு அணை ஒரு நாள் நம் கையை விட்டு போய் விடும் என தமிழக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

எனவே கேரளாவின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில், தமிழகத்தில் ஐந்து மாவட்டத்தில் வசிக்கும் 95 லட்சம் மக்களை ஒருங்கிணைக்க பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணை தமிழகத்துடன் தான் இணைந்திருந்தது. கேரள பிரிவினையும் போது, தமிழர்கள் வசிக்கும் பகுதி தவறுதலாக கேரளாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள பகுதிகளான பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என வரும் 17ம் தேதி போராட்டம் தொடங்க உள்ளனர்.

இந்த தாலுகாக்களில் மலையாளிகள் வசிக்கும், அடிமாலி, வாகமண், முண்டகயம், உடும்பஞ்சோலை ஆகிய 18 கிராமங்களை கேரளாவுடன் இணைத்துக் கொள்ளுங்கள் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு தேனி மாவட்ட பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களின் ஒருவரான டாக்டர் பாஸ்கரனும் வரவேற்பு தெரிவித்துள்ளார். விவசாயிகளின் இந்த நிலைப்பாட்டிற்கு கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த ஆதரவினை பார்த்து வியந்த கேரள பத்திரிக்கைகள் அனைத்தும் இந்த விஷயத்தை தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்த பிரச்சினையை கிளப்பிய அன்வர்பாலசிங்கத்திடம் பேட்டி கேட்டு வருகின்றனர்.

பேட்டி அளிக்க மறுத்த அவர், 'இந்திய அரசியல் அமைப்பு சட்டம் எங்கள் உரிமைகளை கேட்டு போராட அனுமதி வழங்கி உள்ளது. நாங்கள் உரிமைக்காக போராடுகிறோம். கேரளாவில் உள்ள நச்சு சக்திகளும், தீய சக்திகளும், இரு மாநில மக்களிடையே சண்டையை தூண்டி விட ஏற்பாடுகளை செய்கின்றனர். நாங்கள் கேரள சகோதரர்களுடன் சண்டையிட தயாராக இல்லை. ஆனால் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை எங்களுக்கு மீண்டும் தர வேண்டும். அப்படி கொடுத்து விட்டால், முல்லைப்பெரியாறு அணை ஒரு பிரச்சினையாகவே இருக்காது.
அதேபோல் மக்களின் வாழ்வுரிமையினை எப்போதும் பிரிவினையாக சித்தரிக்க கூடாது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 July 2022 4:25 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!