/* */

இந்தியாவில் எங்கு நிற்கிறது வான் பாதுகாப்பு சாதனம் எஸ்-400

இந்தியாவில் எஸ்-400 எங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

HIGHLIGHTS

இந்தியாவில் எங்கு நிற்கிறது வான் பாதுகாப்பு சாதனம் எஸ்-400
X

பைல் படம்

ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்த அதிஉச்ச செயல்திறன் கொண்ட வான் பாதுகாப்பு சாதனங்கள் S400 யை இந்தியாவிற்கு வழங்கி விட்டது. அவைகள் முழுமையாக இந்தியா வந்து சேர்ந்து விட்டன.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில், அதனை மேற்கு எல்லையில் நிறுத்தி உள்ளது இந்தியா. சரியாகச் சொன்னால் பாகிஸ்தானை ஒட்டி வரும் பஞ்சாப் மாநிலத்தில், காஷ்மீர் பிராந்தியத்தை முழுமையாக பாதுகாக்கும் வண்ணம் இந்த வான் பாதுகாப்பு சாதனங்களை நிறுத்தி இருக்கிறது இந்தியா. இதனை, நிச்சயமாக தந்திரமான காய் நகர்த்தல் என்கிறார்கள்.

தற்போது உள்ள சூழ்நிலையில் எல்லைகருகில் நம் தேசத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று பார்த்தால் அது சீனா தான். தவிர அவர்கள் தான் ரஷ்ய தயாரிப்பு S400 வான் பாதுகாப்பு சாதனங்களை இந்தியாவுக்கு எதிராக நிலை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். நியாயமாக பார்த்தால் தற்போது நமக்கு வரும் இந்த S400 சாதனங்களை லடாக்கிலோ அல்லது அருணாசலப் பிரதேசம் ஒட்டிய பகுதிகளில் தான் நிலை நிறுத்தி இருக்க வேண்டும் அப்படி தான் உலக ராணுவ வல்லுனர்கள் யோசிப்பார்கள்.

ஆனால் நம் தேசமோ இதனை காஷ்மீர் ஒட்டிய பகுதிகளில் நிலை நிறுத்த போகிறது. இதற்கு காரணம் இருக்கிறது. சீனா இந்தியாவை தாக்குவதென்றால் அது நிச்சயமாக தன் தேசத்தின் ஒரு பகுதி என சொல்லிக்கொள்ளும் லடாக் மற்றும் அருணாசலப் பிரதேசம் அருகில் இருந்து இருக்காது அது சர்வ நிச்சயமாக பாகிஸ்தானிய பிராந்தியமாகவே தான் இருக்கும் என்று இந்திய ராஜதந்திர வட்டாரங்களில் கணித்திருக்கிறார்கள்.

இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. சமீபத்திய நாட்களில் சீன ராணுவத்தினரின் நடமாட்டம், பாகிஸ்தானிய எல்லையோரங்களில் அதிகரித்து காணப்படுகிறது. அவர்களின் கட்டுப்பாட்டில் சில பல ராணுவ தளங்களே பாகிஸ்தான் பகுதிகளில் இருக்கின்றது.

போர் சூழல் ஒன்று உருவானால், நிச்சயமாக சீனா இந்த பகுதிகளில் இருந்தே இந்திய ராணுவத்தினரை எதிர்கொள்ளும். இதற்கு பாகிஸ்தானும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மற்ற இரு இடங்களிலும் அதாவது லடாக் மற்றும் அருணாசலப் பிரதேசம் அருகில் சீனா தன்னந்தனியாகவே இந்தியாவோடு போரிட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால் இந்த பிராந்தியத்தில் நிலைமை அப்படியல்ல.

எப்படியும் இந்தியா, பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை மீட்டெடுத்து விடும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினரை முன் நகர்த்தி பின்னணியில் இருந்து சீனா செயல்பட விரும்புகிறது. அதனை ஒட்டியே அவர்களின் திட்டமிடல்களும் இருக்கின்றன. காரணம் கேட்டால் அந்த பிராந்தியம் ஊடாக பயணிக்கும் BRI திட்டங்களுக்கான பாதுகாப்பு என மழுப்பி சமாளித்து விடலாம் என்கிற நினைப்பும் சீனாவின் மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

அடுத்து வரும் ஆறேழு மாதங்கள் இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒரு காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில்தான் காஷ்மீர் பகுதியை முழுவதுமாக மீட்டெடுக்க நாள் குறித்து இருக்கிறார்கள் . இந்த இடத்தில் அதாவது பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் சீனா செயல்படுத்தி வைத்திருக்கும் வளைந்திருக்கும் இடங்களில் என்ன மாதிரியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது வரை இந்தியா தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

சீனாவும் அதனை நன்கு உணர்ந்தே இருக்கின்றது. ஆதலால் தான் பாகிஸ்தான் ஊடாக வரும் BRI திட்டங்களுக்கான நிதியை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே நிறுத்தி வைத்து விட்டனர். செலவு செய்த தொகையை வேறு திருப்பி தர பாகிஸ்தானை போட்டு குடைந்து கொண்டு இருக்கிறார்கள்.இது ஒரு புறம் இருக்க, இந்தியாவின் இந்த நகர்வில் வேறோர் சூட்சுமமும் இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

தற்போது இந்த பகுதியில்தான் நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. ஆப்கானிஸ்தான் முதல் பாகிஸ்தான் வரை உள்ள எல்லையில் யார் எந்த மாதிரியான ஆயுதங்களுடன் நடமாடுகிறார்கள் என்பது சர்ச்சைக்குரிய சங்கதியாகவே இருக்கிறது. போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் விலகி சென்ற போது முழுமையாக இல்லாமல் பெரும்பாலான ஆயுத தளவாடங்களை அந்த பிராந்தியத்திலேயே போட்டு விட்டு சென்று இருக்கிறார்கள்.

அவர்கள் வேண்டும் என்றே இதைச்செய்திருக்கிறார்களா அல்லது யதார்த்தமாக நடந்ததா என்கிற சந்தேகத்தின அடிப்படையிலும் புலனாய்வு அமைப்புகள் தகவல்களை சேகரித்து வருகின்றன. அதாவது அந்த ஆயுதங்களை கொண்டு அவர்களுக்குள்ளாகவே அடித்து கொண்டு சாகவேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது என்கிற காரணம் சொன்னாலும், இதன் பின்னணியில் வேறு ஒரு திட்டமிடல் இருக்குமோ என இந்தியா சந்தேகிக்கிறது. அதாவது அந்த ஆயுதங்களை பாகிஸ்தானோ அல்லது சீன ஆதரவு இயக்கங்களோ வேறு எந்த ஒரு பெயரில் உள்ள அமைப்பினரோ மறைமுகமாக இந்தியாவுக்கு எதிராக பயன் படுத்த கூடும் என்கிறார்கள் அவர்கள்.

சீனாவும் ஏற்கெனவே தனக்கு ஒரு கண் போனாலும் மற்றவருக்கு இரு கண்ணும் போகவேண்டும் என்கிற மனநிலையில் தான் தற்போது இருக்கிறது. கல்வானில் வாங்கிய அடி அப்படி. இதில், வெளிப்படையாக சிரித்தாலும், பழி தீர்த்துக்கொள்ள சீனா காத்துக் கொண்டு இருக்கிறது என்பதுதான் நிஜம். அந்த பிராந்தியத்தில் உள்ள மற்றவர்களை பற்றி கேட்கவே வேண்டாம்.

பஞ்சாப் மாநிலம் மட்டும் இரண்டு நாடுகளிலும் வருகிறது. ஒன்று இந்தியா மற்றொன்று பாகிஸ்தான். இவர்கள் சிலரை அதாவது சீக்கியர்களை தயார்படுத்தி தூண்டிவிட்டு, விவசாயிகள் என்கிற போர்வையில் இந்தியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இன்றளவும் இது நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இதன் பின்னணியில் அமெரிக்க NGO களின் வழியிலான கைங்கரியம் இருப்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.

இவர்களின் யாரேனும் அல்லது ஏதோ ஒரு அமைப்பு ஊடாக இந்தியாவை தாக்கும் சந்தர்ப்பங்கள் மிக அதிகமாக இருக்கிறது. இங்கு எதிரி யார் என்பது அவ்வளவு எளிதில் கை காட்ட முடியாத சூழ்நிலை வேறு நிலவுகிறது. போதாக் குறைக்கு அமெரிக்க உளவு துறையும் பாகிஸ்தானிய உளவு துறையும் இன்றளவும் ஒட்டி உறவாடி கொண்டு இருக்கிறன. இவையெல்லாம் கணக்கில் கொண்டே இந்தியா, ரஷ்ய தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களை இந்த பிராந்தியத்தில் நிலை நிறுத்தி வைக்க உத்தேசித்து இருப்பதாக சொல்கிறார்கள். இது ஒரு அட்டகாசமான வரவேற்க வேண்டிய திட்டமிடல். இவர்களில் யார் எல்லை மீறினாலும் பிடித்து உதைக்க இந்தியா எல்லையில் தயாராக நிற்கிறது.

இந்திய - சீன எல்லையில் மிக வலுவான வான் படையை நிறுவி பாதுகாக்கும் அதே நேரத்தில், பாகிஸ்தானை ஒட்டிய எல்லையில் அதி நவீன வான் பாதுகாப்பு சாதனங்களை நிலை நிறுத்த திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில், எந்தப்பக்கம் யார் வந்தாலும், எத்தனை பேரோடு வந்தாலும், அடித்து துவம்சம் செய்ய 20-40 நாட்கள் வரை தாக்குப் பிடித்து தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வெகு நிச்சயமாக மிகப் பெரிய விஷயம் ஆகும்.

நமது ராணுவத்தினரின் ஒரு வார தாக்குதலை கூட தற்போது இந்திய எல்லையில் உள்ள எந்த ஒரு நாடும், சீனா உட்பட தாக்கு பிடிக்க முடியாது என்கிறார்கள். இவ்வாறான சூழலில், பூகோள ரீதியாக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ள இந்தியாவில், நம் ராணுவத்தினரை எதிர்கொள்ளும் துணிவு இந்த உலகில் யாருக்கும் இல்லை என்பதே நிதர்சனம்.

Updated On: 14 Oct 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?