/* */

யாருக்கும் அடிபணியாமல் உலக அரங்கில் தலையெடுக்கும் இந்தியா

India US Latest News -அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டிற்கும் அடிபணியாமல் உலக அரங்கில் இந்தியா சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக தலையெடுத்து வருகிறது.

HIGHLIGHTS

யாருக்கும் அடிபணியாமல் உலக அரங்கில் தலையெடுக்கும் இந்தியா
X

India US Latest News -இன்றைய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி ரஷ்யாவை தனது ஐ.நா.சபை பேச்சில் மிக பலமாக கண்டித்தார். ஆனால் அவரின் தேசத்திலேயே கூட அந்த பேச்சு கவனிக்கப்படவில்லை. ஆனால் மோடி ரஷ்ய அதிபரை நேரில் சந்தித்தபோது, "இது போருக்கான காலமல்ல, பேசி தீர்க்க வேண்டிய நேரம்", என்றுரைத்தது. உலகெங்கும் செய்தியாக பரவியது. இந்தியாவை வழக்கமாக இழிவுபடுத்தும் அமெரிக்க பத்திரிகைகள் கூட அதை பெரிய அளவில் முக்கிய செய்தியாக்கியது. அதற்கு புடின் கோரிக்கையை மதிப்பதாகவும், அதை பரிசீலப்பதாக சொன்னார். அந்த நிலையில் இன்றைய வல்லரசான அமெரிக்கா தானே இருந்தது, அப்படி என்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது?

உக்ரைனுக்கு பின் தான் இருப்பதாகவும், தன் பின்னால் நேட்டோவும் மேற்கத்திய நாடுகளும் இருப்பதாக அமெரிக்கா கொடுத்த உறுதிமொழிகளால் உக்ரைன் கொக்கரிக்க, ரஷ்யா தாக்க ஆரம்பித்தபோது காற்றில் பறந்தது அந்த உறுதிமொழிகள். பொருளாதார தடைமூலம் ரஷ்யாவை தனிமைப்படுத்தப் போவதாக அமெரிக்கா கொக்கரித்தது. ஆனால் அந்த தடையை தன் உற்ற நண்பர்கள் கூட அதை பின்பற்றவில்லை.

தானும் வல்லரசுதான் என்று சொல்லும் சீனாவை அடக்க முடியாது என்பது அமெரிக்காவிற்கு தெரியும். இந்தியா, அமெரிக்க தடையை கண்டுகொள்ளவே இல்லை. இந்தியா மீதும் பொருளாதார தடை பாயும் என்று எச்சரித்தது. இந்தியாவை. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தியது. அதற்கு இந்தியா கொடுத்த பதிலில் 'நாங்கள் நிறுத்திக்கொள்கிறோம், ரஷ்யா கொடுக்கும் விலையில் நீங்கள் கச்சா எண்ணெய் கொடுக்க முடியுமா' என்ற போது பதில் சொல்லாமல் பதுங்கியது அமெரிக்கா.

ரஷ்யாவின் பணம் அமெரிக்க வங்கிகளில் பில்லியனில் இருக்க, அது பயன்படுத்த முடியாது போய்விட்டது. அதனால் ரஷ்யா வர்த்தகம் செய்ய முடியாது என்று நினைக்க, ரஷ்யாவின் ரூபிள் வீழும் என்று நினைக்க, ஐரோப்பிய யூனியன்கள் ரூபிளில் கொடுத்து எரிபொருள் வாங்க வேண்டிய சூழலால் அதுவும் முடியவில்லை. இந்தியா தனது ரூபாயை கொடுத்து கச்சா எண்ணெயை மிக குறைவான விலைக்கு வாங்கியது.2 சதவீதம் ஆக இருந்த அதன் இறக்குமதி, இரண்டாவது பெரிய இறக்குமதியாக மாறியது. அது மட்டுமல்ல, அமெரிக்க டாலருக்கு மாற்றாக தனது ரூபாயை உலகத்தின் நாணயமாக்கும் முயற்சி நடக்கிறது.

எந்த ஒரு பிரச்சினை வந்தாலும், கச்சா எண்ணெய் ஏற்றம் மூலம் உலகத்தில் விலைவாசி எகிறி, அது ஏழை நாடுகளை மட்டுமே பாதிக்கும். அதன் டாலர் டிமாண்டினால் ஒருபோதும் அமெரிக்காவை பாதிக்காது. இந்த முறை முதன் முதலாக அமெரிக்க 40 ஆண்டுகளில் இல்லாத பண வீக்கத்தை அது சந்தித்துள்ளது. அது கொடுத்த உதவி தொகைகள் எல்லாம் அதன் விலைவாசியை மேலும் மோசமாக்கியது.

உலகத்தில் எந்த பொருளும் எனக்கு கிடைத்தது போக மீதிதான் மற்ற நாடுகளுக்கு என்று உயர்ந்த குடியாக வாழ்ந்த அமெரிக்கா, இந்தியாவை கோதுமை ஏற்றுமதி செய்ய நிர்ப்பந்தித்தது. இந்தியா சம்மதித்தது. ஆம், இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்கிறோம், ஆனால் அமெரிக்கவிற்கு அல்ல. ஏழை நாடுகளுக்கு என்றது. நாங்கள் கூடுதல் விலை தருகிறோம் என்றது. இந்தியா, இதை நாங்கள் விற்கவில்லை இலவசமாக அவர்களுக்கு தருகிறோம் என்றது. கூடுதல் விலை கொடுத்து வாங்கிவிட நினைத்த அமெரிக்காவிற்கு இந்தியா சொன்னது செவுட்டில் அடித்த இடியானது.

ஐரோப்பிய யூனியனில் வெகு சில நாடுகளே இந்த எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தடுமாறும்போது, அங்கே இருக்கும் ஏழை நாடுகள் என்ன செய்யும்? கோபத்தின் உச்சிக்கே சென்றது. அமெரிக்காவிற்கு ஏன் அடிபணிகிறீர்கள்? இந்தியாவை போல சுயமாக முடிவெடுங்கள் என்று நம் முடிவுகளை நியாயப்படுத்தியது. அவர்கள் மட்டுமல்ல, நம் எதிரியான பாகிஸ்தான் இந்தியாவைப்போல சுய சார்பு நிலை நமக்கு தேவை என்றது. இதனை பார்த்த சீனா ஆச்சர்யப்பட்டு போனது.

எதை செய்தாலும் அமெரிக்காவின் குரலுக்கு இணங்கி போவதைவிட வேறு வழியில்லை என்று முடங்கி போவதே வாழ்க்கை. நமக்காக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் என்று இருந்த ஏழைநாடுகளுக்காக, இந்தியா கொடுத்த குரல், அவர்களை வெகுவாக ஈர்த்தது. அதன் விளைவாக நூற்றாண்டுகளாக தங்களது இயற்கை வளங்களை அமெரிக்கர்களுக்கும், பின்னர் சீனாவிற்கும் கொடுத்தபோதும் நமக்கு பசி தீர்க்க முடியவில்லையே என்று ஏங்கி தவித்த இந்த நாடுகளுக்கு உணவு பொருள் மட்டுமல்ல, இலவசமாக தடுப்பூசி கொடுத்த இந்தியா, அவர்களுக்கு இன்று தெய்வமாக தெரிகிறது. அதன் விளைவாக இந்தியாவை தங்கள் இயற்கை வளங்களை பயன்படுத்திக்கொள்ள அழைக்கிறது. காரணம், இந்தியா ஒரு சுய நலமற்ற நாடு, அது தானும் உயர்ந்து, தம்மையும் உயர்த்தும் என்று நம்பியதால்.

சீனாவை எதிர்க்க, அதை சுற்றியும் எதிரிகளை அமெரிக்கா ஒன்று சேர்க்க முயன்றபோது, உன்னை நம்பி நாளை உனக்கு அடிமையாக தயாரில்லை என்று அதன் கடந்த கால அனுபவங்களால் தவிர்த்த நாடுகள், இந்தியா சீனாவை எதிர்த்தபோது, அது நம்முடன் அணிசேர தயார் என்று அறிவித்தது. உனக்கு தேவையான ஆயுதங்களை எங்களால் தர முடியாது, ஆனால் உங்கள் படைகள் தங்கிச்செல்ல அனைத்து உரிமைகளையும் தருகிறோம். தேவைப்பட்டால், எங்கள் ராணுவ உதவிகளையும் தருகிறோம் என்றது. நம்மிடம் இருந்து ஆயுதங்களையும் வாங்குகிறது.

இதனை எதிர்பார்க்காத அமெரிக்கா, சீனாவை எதிர்க்க நானும் உதவுகிறேன் என்று மோதலை தூண்டியது. அதன் நோக்கம் என்பது நம்மை தூண்டிவிட்டு, குளிர்காய நினைக்கிறது. அந்த போரில் யார் தோற்றாலும் அதற்கு லாபமே என்பது அதன் கணக்கு என்பதை நன்கு உணர்ந்த இந்தியா, இது என்னுடைய பிரச்சினை, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மறுத்தது. இதுவரை முன்னெடுத்த காலை பின்வைக்காத சீனா, முதன் முறையாக பின்வாங்கியது. அது செய்த சைகாலஜிகள் போர் என்பதெல்லாம் இங்கே வேகாது என்று சீனாவிற்கு இந்தியா பாடம் புகட்டியது. சீனாவை வெல்ல, அதன் பொருளாதாரத்தை தாக்குவதுதான் எளிய வழி, அழிவற்ற யுக்தி என்று இந்தியா அடியெடுக்க, பதிலுக்கு தடியெடுக்க முடியாத சீனா தடுமாறுகிறது.

இந்தியாவின் செல்வாக்கு மட்டுமல்ல, பலமும் உயர்கிறது என்று புரிந்து கொண்டு, அதை பாகிஸ்தான் மூலமே சரி செய்ய முடியும் என்று அதற்கு F16 விமானங்களை மேம்படுத்துவதாக அறிவித்தது அமெரிக்கா. அதில் இரண்டு நன்மைகள், ஒன்று பாகிஸ்தானை சீனாவிடம் இருந்து மீட்பது. அடுத்து இந்தியாவை பலவீனப்படுத்துவது. அதனால் இந்தியா தன் காலில் விழும் என்பது அதன் எதிர்பார்ப்பு. இந்த உதவியால் பாகிஸ்தானுக்கும் பலனில்லை, அமெரிக்காவிற்கும் பயனில்லை, என்று நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க மண்ணிலேயே சொல்ல, அசிங்கப்பட்டது அமெரிக்கா.

அந்த F16 ரக விமானத்தை அபிநந்தன் Mig21 என்ற பறக்கும் சவப்பெட்டியால் வீழ்த்தியதை உலகம் மறக்கவில்லை. இந்தியாவிற்கு, எப் 16ஐ விட மேலான Tejas இருக்கிறது. எதற்காக பயம்? அதே Tejas விமானங்களை வாங்க விருப்பம் தெரிவித்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பதை நம்மில் பலர் இன்றும் அறியவில்லை.

இன்று சீனாவில் இருந்து வந்த தொழில்கள் மட்டுமல்ல, அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்களும் இந்தியாவில் முதலீடு செய்கிறது. காரணம் இந்தியா உலகின் வருங்கால பொருளாதார சக்தி என்பது மட்டுமல்ல, சுய சார்பை நோக்கி வேகமாக வளரும் பெரிய ராணுவ சக்தி என்பதும் முக்கியமான காரணம் தான். இந்தியா தன் வலிமையை பயன்படுத்தி அமெரிக்காவைப்போல உலகத்தின் உழைப்பை, ரத்தத்தை தன் சுய நலத்திற்கு உறிஞ்சவில்லை. நியாயமான உலகத்தின் நம்பிக்கையை. ஒருபோதும் செய்துவிடாது என்ற உலகம் நம்புகிறது. இந்தியா தலையெடுக்கிறது என்பது சரியல்ல, இந்தியாவின் மூலம் உலகத்தில் ஒழுக்கம் தலை நிமிர்கிறது என்பதே அர்த்தம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Oct 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்