Begin typing your search above and press return to search.
பெரியகுளத்தில் மனைவியை அடித்த கணவன் போலீசாரால் கைது
பெரியகுளத்தில் மனைவியை அடித்த கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
பெரியகுளம் நேரு நகரை சேர்ந்தவர் சண்முகநாதன்( 30.) இவரது மனைவி பிரியதர்ஷிணி( 27.) இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் வரதட்சணை பிரச்னை காரணமாக பிரியதர்ஷிணி தனது கணவன் மீது மகளிர் போலீசில் புகார் செய்தார். தேனி குடும்பநல நீதி மன்றத்தில் இவர்களது வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் சண்முகநாதன் தன் உறவினர் மணிகண்டனுடன்( 22 )மனைவியின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியுள்ளார். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பிரியதர்ஷிணி கொடுத்த புகாரில் வடகரை போலீசார் சண்முகநாதனை கைது செய்தனர்.