Begin typing your search above and press return to search.
ஓட்டல் தொழிலாளி கொலை: மதுரை கூலிப்படை கும்பல் கைது
கம்பம் ஓட்டல் தொழிலாளியை கொலை செய்ததாக மதுரையை சேர்ந்த கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தண்ணி தொட்டி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கம்பத்தில் தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்தார். மதுரை செல்லூர், மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை நாகராஜ் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் கடந்த ஜூன் 7ம் தேதி ஓட்டலில் பணி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் வழிமறித்து சுரேஷை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
கொலையாளிகள் இருவரும் மதுரை கூலிப்படையினை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் இருவர் மீதும் பல்வேறு கொள்ளை மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகள் உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே, இவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படையினர் தேனி மாவட்ட சைபர்கிரைம் குழுவின் உதவியுடன் நாகராஜையும், ரஞ்சித்குமாரையும் கைது செய்தனர்.