/* */

பெரியகுளத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: வீடு புகுந்து 15 பவுன் நகை கொள்ளை

பெரியகுளத்தில் வீடு புகுந்து 15 பவுன் நகை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரியகுளத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: வீடு புகுந்து  15 பவுன் நகை கொள்ளை
X

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு வயது 53. இவரது மனைவி ஜெயக்கொடி, வயது 47. சம்பவத்தன்று, இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பார்த்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பாலகிருஷ்ணன், ஜெயக்கொடி தம்பதியர் வீட்டில் வைத்து இருந்த 15 பவுன் நகை மற்றும் ஒண்ணரை லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர். இதையடுத்து வெளியே சென்றிருந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஜெயக்கொடி ஆகிய இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், கதவு திறந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.,

இதையடுத்து, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது, இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தி, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியினர் இடையே பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 Jun 2022 5:16 AM GMT

Related News