/* */

சாலையின் அவலத்தைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம்: கிராம மக்கள் அறிவிப்பு

வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நெல்நாற்று நடும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்

HIGHLIGHTS

சாலையின் அவலத்தைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம்: கிராம மக்கள் அறிவிப்பு
X

வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்செந்துார் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் அவல நிலை

சாலையின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு பகலில் சாலையில் நாற்று நடுவதுடன் இரவில் பண்டைய காலம் போல் தீப்பந்தம் ஏற்றி வைக்கப்போவதாகவும் கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.

தேனியை அடுத்துள்ள வீரபாண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட திருச்செந்துார் கிராமத்தில் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. சாலையின் இரு ஓரங்களிலும் புதர் மண்டிக் காணப்படுகிறது. மின்விளக்குகள் எங்குமே இல்லை. பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை. எனவே, ஓரிரு நாளில் (மழை நின்றதும்) ரோட்டில் நெல் நாற்றுக்களை நடவு செய்யப் போகிறோம். இரவில் பண்டைய காலம் போல் சாலையோரங்களில் தீப்பந்தங்கள் ஏற்றி வைக்கப்போவதாகவும், பாம்பு பிடிப்பவர்களை வரச் சொல்லி இருப்பதாகவும், பாம்புகளை பிடித்துச் சென்று வனத்திற்குள் விட்ட பிறகாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தனர்.

Updated On: 25 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்