/* */

ஆண்டிபட்டி பகுதியில் 80 அடி கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு

ஆண்டிபட்டி பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 200 கிலோ எடையுள்ள கடமானை, தீயணைப்பு படையினர் மீட்டு வனத்தில் விட்டனர்.

HIGHLIGHTS

ஆண்டிபட்டி பகுதியில்  80 அடி கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு
X

கிணற்றில் விழுந்த கடமானை தீயணைப்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டியில் சுந்தர்ராஜ் என்பவரது தோட்டத்தில், 80 அடி ஆழம் உள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில், தண்ணீர் இல்லை. இந்த கிணற்றுக்குள் கடமான் ஒன்று தவறி விழுந்தது. இதனை கவனித்த விவசாய பணியாளர்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் வந்த படையினர், கிணற்றுக்குள் இறங்கி 200 கிலோ எடையுள்ள அந்த கடமானை, காயம் ஏதுமின்றி உயிருடன் மீட்டனர். பின்னர், வன அலுவலர் செல்வராஜிடம் ஒப்படைத்தனர். வன அலுவலர் குழு, அந்த மானை மீண்டும் பத்திரமாக வனத்திற்குள் விட்டது.

Updated On: 22 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...