/* */

போடி மெட்டு அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டுயானை

போடி மெட்டு அருகே காட்டு யானை தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

HIGHLIGHTS

போடி மெட்டு அருகே குடியிருப்புகளுக்குள்  புகுந்த காட்டுயானை
X

போடி மெட்டு அருகே தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானை.

தேனி மாவட்டம், கேரள எல்லையில் உள்ள போடி மெட்டில் இருந்து 6 கி.மீ., தொலைவில் கேரளாவிற்குள் அமைந்துள்ளது தோண்டிமலை கிராமம். இங்கு பெரும்பாலும் தமிழர்களே வசிக்கின்றனர். இங்கு ஏலத்தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் அதிகம். அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் இங்கு யானைகளும் அதிகம்.

இப்பகுதியில் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானை, குடியிருப்பு பகுதிகளுக்கும் உலா வந்தது. ரோட்டில் நீண்ட நேரம் நின்றிருந்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஒற்றை யானை என்பதால் சற்று ஆக்ரோசம் காட்டும் என யாரும் அருகில் செல்லவில்லை.

வனத்துறையினர் வந்து சாதுர்யமாக யானையின் நடைபாதையை திசை திருப்பி, வனத்திற்குள் அனுப்பி வைத்தனர். சில மணி நேரம் சுற்றித்திரிந்த யானை தோட்டங்களையோ, குடியிருப்புகளையோ சேதப்படுத்தவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 30 Dec 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!