Begin typing your search above and press return to search.
தேவதானப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் மீன் வியாபாரி கொலை
தேவதானப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் தொழில் போட்டியில் மீன்வியாபாரி குத்திக் கொல்லப்பட்டார்.
HIGHLIGHTS
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியை சேர்ந்தவர்கள் தனுஷ், (வயது23 )மற்றும் விக்னேஷ், (22.) இவர்கள் அணைப்பகுதியில் மொத்தமாக மீன்களை வாங்கிச் சென்று, கொடைக்கானலில் விற்பனை செய்து வந்தனர். காமக்காபட்டியில் காளியம்மன் கோயி்ல் திருவிழா நடைபெற்று வருகிறது. இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்த நிலையில், இருவரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி தகராறில் ஈடுபட்டனர். தனுஷ் கத்தியால் விக்னேஷை குத்தினார். பலத்த காயமடைந்த விக்னேஷ் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதனையொட்டி தேவதானப்பட்டி போலீசார் தனுஷை கைது செய்தனர்.