/* */

முல்லை பெரியாறு அணையில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவை விட, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதாலும், அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதாலும் நீர்மட்டம் உயரும் வாய்ப்புகள் குறைந்துள்ளது.

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணை நீர் மட்டம் 10 அடி வரை உயர்ந்து 138 அடியை எட்டியது. அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர் வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை விநாடிக்கு 2131 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.

அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அணை நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் குறைந்துள்ளது. தற்போதைய நிலையில் அணைநீர் மட்டம் 137.60 அடியாக உள்ளது. இனிமேல் பலத்த மழை பெய்தால் மட்டுமே நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 Oct 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...