/* */

சின்னமனுாரில் வேன் கவிழ்ந்து விபத்து: மில் தொழிலாளர்கள் 15 பேர் காயம்

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே தனியார் மில் வேன் கவிழ்ந்த விபத்தில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

சின்னமனுாரில் வேன் கவிழ்ந்து விபத்து: மில் தொழிலாளர்கள் 15 பேர் காயம்
X

சீலையம்பட்டி பூ மார்க்கெட் அருகே, தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் ரோடு, சீலையம்பட்டி பூமார்க்கெட் அருகே, வேலைக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு, தனியார் மில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

போலீசாரும், தீயணைப்பு மீட்புப்பணித் துறையினரும், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், சின்னமனூர் அரசு மருத்துவமனை, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த இடத்தில், ரோடு வளைவு முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு அடிக்கடி விபத்து நடப்பதாக, அப்பகுதியினர் கூறுகின்றனர். எனவே, விபத்தினை தடுக்க போலீஸ், வருவாய், வட்டார போக்குவரத்து துறை பரிந்துரைப்படி ரோடு வளைவினை சரி செய்ய வேண்டும். இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 22 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்