/* */

தேனி மாவட்டத்தில் நெல் நடவு பணிகள் மும்முரம் : 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பகுதியில் நெல் நடவுப்பணிகள் நடந்து வருகின்றன.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் நெல் நடவு பணிகள் மும்முரம் :    14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி
X

தேனியில் நெல் நடவு பனி மும்முரமாகியுள்ளது.

தேனி:

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடிக்கு நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முல்லை பெரியாறு பாசனம் மூலம் தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல் போக சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது . இதனை தொடர்ந்து விவசாயிகள் நாற்றங்கால் வளர்த்து நெல் விதைப்பு செய்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கூடலுார் முதல் தேனி,பழனிசெட்டிபட்டி வரை நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பிலும் நெல் நடவுப்பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவு பெறும் என தேனி வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  2. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  4. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  5. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  6. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  9. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  10. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு