/* */

திராட்சை தோட்டத்தில் திருடியவர்கள் கைது

கம்பம் அருகே கோகிலாபுரத்தில் திராட்சை தோட்டத்தில் திருடிய மூன்று பேரை ராயப்பன்பட்டி போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திராட்சை தோட்டத்தில் திருடியவர்கள் கைது
X

மாதிரி படம் 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோகிலாபுரத்தைச் சேர்ந்தவர் தீபாவளி ராஜ்(48). இவர் அப்பகுதியில் அமமுக ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு ஆனைமலையன்பட்டியில் திராட்சை தோட்டம் உள்ளது. தோட்டத்திற்கு பந்தல் போடுவதற்காக 60 கிலோ கட்டு கம்பிகள், 100 அடி நீளமுள்ள டைமன் கம்பிகள், 3000 அடி நீளமுள்ள சொட்டுநீர் பாசன குழாய்கள் வாங்கி தனது தோட்டத்தில் உள்ள அறையில் வைத்திருந்தார்.

இந்த பொருட்களை நேற்று இரவு யாரோ திருடிச் சென்று விட்டனர். சம்பவம் குறித்து தீபாவளிராஜ் ராயப்பன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த பொருட்களை திருடியதாக ஆனைமலையன்பட்டியைச் சேர்ந்த மல்லையன் சாமி (46), முத்தையா (41), அய்யனார் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்