Begin typing your search above and press return to search.
18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு: 5000ம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
கம்பம் அருகே முல்லை பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
HIGHLIGHTS

முல்லை பெரியாற்றில் இருந்து பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கம்பம் அருகே முல்லை பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாயில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் தொடர்ச்சியாக 95 நாட்களுக்கு விநாடிக்கு 95 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் கம்பம், உத்தமபாளையம், போடி ஒன்றியங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பும். 5000ம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.