/* */

பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த மூன்று நாளில் ஐந்து அடி உயர்ந்தது

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணை நீர் மட்டம் இன்று காலை 135.5 அடியை எட்டியது.

HIGHLIGHTS

பெரியாறு அணையின்  நீர் மட்டம் கடந்த மூன்று நாளில் ஐந்து அடி உயர்ந்தது
X

முல்லை பெரியாறு அணை

கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் மூன்று நாளில் ஐந்து அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர் மட்டம் 135 அடியை தாண்டியது.

தேனி மாவட்டத்தை ஒட்டி கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை நீர் முழுவதையும் தமிழகம் பயன்படுத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அணையில் 142 அடி நீர் மட்டுமே தேக்க முடியும். மூன்று நாட்களுக்கு முன்னர் அணையின் நீர் மட்டம் 130 அடியாக இருந்தது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு விநாடிக்கு 8,000 கனஅடி வரை நீர் வரத்து இருந்தது. இதனால் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. மூன்று நாளில் நீர் மட்டம் 5 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 135.5 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 900 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

Updated On: 25 July 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்