/* */

முல்லைபெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லைபெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு
X

முல்லைபெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு நடத்தினார்கள்.

கடந்த சில தினங்களாக கேரளாவில் பெய்து வரும் கோடை மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து மத்திய துணை கண்காணிப்புக் குழுவினர் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்காக தேக்கடியில் உள்ள படகுத் துறை வழியாக ஐவர் குழுவினர் அணைப்பகுதிக்குச் சென்றனர்.

இந்த ஆய்வில், முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணை, மதகு பகுதிகள், கேலரிப் பகுதிகள், சுரங்கப் பகுதிகள் உள்ளிட்டவைகள் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் அணையின் கசிவு நீர் அளவீடு குறித்தும் கணக்கீடு செய்யப்படுகிறது. ஆய்விற்கு துணை கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, ஆய்வறிக்கையை மூவர் கண்காணிப்புக்குழு தலைவரான மத்திய நீர் வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்சன் ராஜ்ஜிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மூவர் குழுவினருடன் இணைந்து துணைக் கண்காணிப்பு குழுவினர் நடத்திய ஆய்வுக்கு பிறகு இரண்டு மாதத்திற்கு பிறகு இன்று ஆய்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.65அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 3,974மி.கன அடியாக இருக்கிறது. அணைக்கு விநாடிக்கு வரத்துள்ள 100கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Updated On: 20 April 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?