தேனி மாவட்டம் கூடலுாரில் குளக்கரையில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்

தேனி மாவட்டம் கூடலுாரில் உள்ள ஒட்டான்குளம் கண்மாய் கரையில் தனியார் மருத்துவமனைகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேனி மாவட்டம் கூடலுாரில் குளக்கரையில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்
X

கூடலுார் கண்மாய் கரையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் மருத்துவக் கழிவுகளை தனியார் மருத்துவமனைகள் கொட்டுவதால் கண்மாய் நீர் கடுமையாக மாசுபடுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்து தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த பிரச்னையே முடிவுக்கு வராத நிலையில், கூடலுாரில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் மருத்துவக் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

மருத்துவக்கழிவுகளை அகற்ற பல்வேறு தனியார் நிறுவனங்களே தங்களது வாகனங்களை அனுப்பி கழிவுகளை சேகரித்து செல்கின்றனர். டாக்டர்களே இந்த வசதிகளை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் இப்படி கழிவுகளை கொட்டுவது வேதனையாக உள்ளது. இதன் மூலம் கண்மாய் நீர் மாசுபட்டு, சாகுபடியில் கூட கடும் பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டிய மருத்துவமனைகளே இந்த சுகாதார சீர்கேட்டுக்கு துணை போனால் எவ்வாறு சுகாதாரத்தை பேண முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு மருத்துவ கழிவுகளை குளத்தின் கண்மாய் கரைகளில் கொட்டும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 12 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  2. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  3. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  4. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  6. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  7. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
  8. காஞ்சிபுரம்
    வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி:...
  9. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  10. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!