/* */

நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு

நவ.1ம் தேதிகேரள வழக்கறிஞர்களை கண்டித்து, 5 மாவட்ட விவசாயிகள் கேரள எல்லையை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
X

முல்லைப்பெரியாறு ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

முல்லை பெரியாறு அணைக்கு எதிராக பேசி வரும் கேரள வக்கீலை கைது செய்யாவிட்டால், நவ.,1ம் தேதி கேரள எல்லையை முற்றுகையிடுவோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஓருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், முல்லை பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது. கேரள வக்கீல் ரசல்ஜோய் அணைக்கு எதிராக பேசி வருகிறார். இரு மாநிலங்களுக்கு இடையே பகையை துாண்டி வருகிறார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அணை பாதுகாப்புக்கு எதிராக பேசுவதை நிறுத்த சொல்ல வேண்டும்.

இல்லையெனில் நவ., 1ம் தேதி குமுளியில் கேரள எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். கடந்த 1956ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து பிரித்து கொடுத்த 1400 சதுர கி.மீ., மலைப்பரப்பினை மீண்டும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

Updated On: 26 Oct 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...