உத்தமபாளையம் பகுதியில் பலத்த மழை: வெள்ளப் பெருக்கால் நெற்பயிர்கள் சேதம்

தேனி மாவட்டம் வீரபாண்டி, உத்தமபாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பல நுாறு ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

தேனி மாவட்டம், வீரபாண்டி, உத்தமபாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்தன. மேலும், பல வீடுகளும் சேதம் அடைந்தன.

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, உத்தமபாளையம், புதுப்பட்டி, கம்பம், கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. வீரபாண்டியில் மட்டும் ஒரே நாளில் 124 மி.மீ., மழை பதிவானது. போடியில் 30.2 மி.மீ., பெரியாறு அணையில் 25.6 மி.மீ., கூடலுாரில் 20 மி.மீ., உத்தமபாளையத்தில் 17.3 மி.மீ., மழை பதிவானது. இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது நெற் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில், தற்போது பெய்த மழையால் பல நுாறு ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் சாய்ந்து பலத்த சேதம் அடைந்துள்ளன. பல நுாறு ஏக்கர் பரப்பில் விளைந்த நெற்கதிர்கள் சாய்ந்து விட்டதாகவும், ஒரு ஏக்கருக்கு நெல் சாகுபடிக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாகவும், இந்த மழையால் பயிர்கள் சேதமடைந்து பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். அதேபோல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், மழை சேத விவரம் குறித்து விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 2021-10-05T15:36:08+05:30

Related News

Latest News

  1. சினிமா
    இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  5. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  6. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  7. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  8. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  9. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  10. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...