/* */

கம்பம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற முயற்சி

கம்பம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கம்பம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற முயற்சி
X

கம்பம் அரசு மருத்துவமனை - கோப்புப்படம் 

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக, மாவட்டத்தில் அதிகளவில் பிரசவம், கம்பம் அரசு மருத்துவமனையில் நடக்கிறது. கம்பம் மற்றும் சுற்றுக்கிராம பெண்கள் மட்டுமின்றி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பெண்களும் பிரசவத்திற்காக இங்கு வருகின்றனர்.

இதற்காக, 24 மணி நேரம் பிரசவம் பார்க்க வசதியாக சீமாங் சென்டரும் செயல்பட்டு வருகிறது. நவீன நுண்துழை அறுவை சிகிச்சை மூலம் கருத்தடை ஆபரேஷன் செய்யும் வசதிகளும் உள்ளன. பிரசவ டாக்டர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், ரத்தவங்கி வசதி, ஆக்ஸிஜன் வசதிகள் இருப்பதால், தேசிய தரச்சான்றிதழ் பெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தேசிய தரச்சான்றிதழ் கிடைத்திருக்கும். கொரோனா காலகட்டம் என்பதால் நடைமுறை ஆய்வுப்பணிகள் செய்ய மத்திய குழு வரவில்லை. எனவே இந்த வாரம் மத்திய குழு வருகை தந்து மருத்துவமனையினை ஆய்வு செய்து, விரைவில் தேசிய தரச்சான்றிதழ் வழங்கபட உள்ளது என, தேனி மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 29 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்