கொரோனா தளர்வு: புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் வந்த முதல் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் வழிபட்டனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கொரோனா தளர்வு: புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
X

போடிஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்கள்.

தேனி மாவட்டத்தில் கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் இன்று புரட்டாசி மாதம் வந்துள்ள சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்.வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த 4 புரட்டாசி சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.



கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் புரட்டாசி மாதம் வந்து முதல் சனிக்கிழமையும் கடைசி சனிக்கிழமையும் இன்றுதான். அடுத்த வாரம் ஐப்பசி மாதம் பிறக்கிறது.

எனவே இந்த புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலுடன், தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.போடி சீனிவாசப்பெருமாள் கோயில், ஆண்டிபட்டி கதலி நரசிங்கப்பெருமாள்கோயில்,கம்பம் கம்பராயபெருமாள் கோயில்களில் சுமார் 2 கி.மீ., துாரம் வரை பக்தர்கள் கூட்டம் நீண்டு காணப்பட்டது.

Updated On: 16 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  5. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  6. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  7. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  8. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  9. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  10. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...