/* */

கூடலுாரில் விவசாய நிலங்கள், கோயிலுக்கு செல்ல ரூ.2.5 கோடியில் தார் சாலை

கூடலுாரில் விவசாய நிலங்கள், கோயிலுக்கு செல்ல வசதியாக ரூ.2.5 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

கூடலுாரில் விவசாய நிலங்கள், கோயிலுக்கு செல்ல   ரூ.2.5 கோடியில் தார் சாலை
X

கூடலுாரில் கோயில், விவசாய நிலங்களுக்கு செல்ல ரூ. இரண்டரை கோடி செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சியில் இருந்து ஏகலுாத்து, மச்சக்கல் வழியாக பெருமாள் கோயில் வரை மண் ரோடு செல்கிறது. இந்த வழித்தடத்தில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. தவிர கோயிலுக்கு பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

மழைக்காலங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத அளவு சகதியாகி விடும். அந்த சமயத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் சிரமப்படுவார்கள். எனவே இங்கு தார்ரோடு வசதி வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 5.2 கி.மீ., துாரம் உள்ள இந்த ரோட்டினை நகராட்சி நிர்வாகம் தற்போது 2.5 கோடி ரூபாய் செலவில் தார்ரோடாக மாற்றி அமைத்து வருகிறது.

இதன் மூலம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 Oct 2021 12:02 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்