/* */

நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து சோகம்

தேனி மாவட்டத்தில், இரு வேறு சம்பவங்களில் மூன்று மணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.

HIGHLIGHTS

நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து சோகம்
X

பலியான சிறுவர்கள். 

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ், 14, கவுதம், 14. இவர்கள் இருவரும் இங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இன்று மாலை வேப்பம்பட்டியில், செயல்படாத கல்குவாரியில் குளிக்க சென்றனர். அப்போது நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். சின்னமனுார் தீயணைப்பு மீட்பு படையினர், இருவரது உடலையும் மீட்டனர். சின்னமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் மகேஷ். இவர் தனது மனைவி பாரதி, மகன்கள் விஷால், கார்த்திக், ஆகியோருடன் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வந்திருந்தார். விஷால் சென்னையில் பிளஸ் 2 படித்து வந்தார். கார்த்திக் 9ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை குரங்கனி, வீரபாண்டிக்கு சென்று விட்டு, மாலை இவர்கள் போடி பெரியாத்து கோம்பை அருகே அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நால்வரும் நீர் சுழலில் சிக்கினர். இதில் விஷால் இறந்தார். மகேஷ், பாரதி, கார்த்திக் உயிர்தப்பினர். போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Oct 2021 12:46 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  3. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  4. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  5. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  6. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  10. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய