/* */

கேரளாவுக்கு கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தல் கும்பல் சிக்கியது

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 12 கிலோ கஞ்சாவுடன், இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கேரளாவுக்கு கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தல் கும்பல் சிக்கியது
X

கஞ்சா கடத்தலில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 4 பேர்.

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு ஆட்டோவில் கஞ்சா கடத்திச் சென்ற இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து கூடலுார் எள்ளுக்காட்டுப்பாறை வழியாக ஆட்டோவில் கஞ்சா கடத்திச் செல்வதாக குமுளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து எஸ்.ஐ., சுதாகரன் தலைமையில் போலீசார், காஞ்சிமரத்துறை பாலம் கீழ கண்ணகி கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரளா நோக்கி சென்ற ஆட்டோவினை சோதனையிட்டனர்.

அதில் பனிரெண்டு கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தியதாக கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த சுகப்பிரியா, மந்தையம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஈஸ்வரி, மற்றும் குபேந்திரன், சிவகாமன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

Updated On: 4 Aug 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?