வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
X

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திருடு போன 2 சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக வந்த புகாரினை அடுத்து தேனி மாவட்ட எஸ்பி., சாய்சரண் உத்தரவின் பேரில் இரு சக்கர வாகன திருடர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில் உத்தமபாளையம் காவல்துறையினர் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சார்ந்த கௌதம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கௌதமை கைது செய்த காவல்துறையினர் இந்த இரு சக்கர வாகன திருட்டில் அவருடன் இணைந்து செயல்பட்டவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டது.இதில் புதுப்பட்டியை சேர்ந்த சரவணகுமார், காக்குவீரன், நந்தகுமார், புகழ் உள்ளிட்ட நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து இந்த ஐந்து பேரையும் பிடித்து விசாரணை செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்களை மீட்டனர். கைது செய்த ஐந்து நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Updated On: 13 Feb 2021 10:38 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  2. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
  4. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  6. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  7. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
  10. தேனி
    சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி