/* */

ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு குளம்போல் மாறிய வைகை ஆறு

தேனி குன்னுார் வைகை ஆறு ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு குளம் போல் காட்சியளிக்கிறது.

HIGHLIGHTS

ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு  குளம்போல் மாறிய வைகை ஆறு
X

குன்னுார் வைகை ஆறு ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு காணப்படுகிறது.

வைகை ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் 9 மாதங்கள் தண்ணீர் வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வைகை அணையின் நீர் மட்டம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. அதுவும் கடந்த ஆண்டு தொடர்ச்சியாக பல மாதங்கள் அணையின் நீர்மட்டம் 69 அடி என்ற நிலையிலேயே இருந்தது.

தற்போது கூட அணையின் நீர்மட்டம் 67 அடியாகவே உள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள குன்னுார் வைகை ஆறு வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதாவது வைகை ஆற்றில் குன்னுார் கிராமம் வரை அணை தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல மாதங்களாக இப்படி தண்ணீர் தேங்கி நிற்பதால் குளத்தில் வளர்வது போல் ஆகாயதாமரை செடிகள் வளர்ந்து ஆறு முழுக்க மூடி உள்ளது. இதனால் பார்ப்பதற்கு ஏதோ நீண்ட குளம் போல் காணப்படுகிறது. வைகை ஆற்றில் இதற்கு முந்தைய காலங்களில் இப்படி ஆகாயத்தாமரை செடிகள் மூடி இருந்ததை தாங்கள் பார்க்கவில்லை என தேனி மக்கள் தெரிவித்தனர்.

Updated On: 1 Jun 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...