/* */

தனது வார்டில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக தேசியக் கொடி வழங்கிய கவுன்சிலர்

தேனி மாவட்டம், கம்பம் புதுப்பட்டி பா.ஜ., கவுன்சிலர் ஆர்.பிரதீபா தனது வார்டில் அனைத்து வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்கினார்.

HIGHLIGHTS

தனது வார்டில் அனைத்து வீடுகளுக்கும்  இலவசமாக தேசியக் கொடி வழங்கிய கவுன்சிலர்
X

க.புதுப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.பிரதீபா தனது வார்டில் உள்ள வீடுகளுக்கு தேசியக் கொடி வழங்கினார்.

பிரதமர் அழைப்பினை ஏற்று நாடு முழவதும் இன்று முதல் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன. தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சிகளும் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு தேசியக்கொடிகளை வழங்கி வருகின்றன.

கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி ஏழாவது வார்டு பா.ஜ., கவுன்சிலர் ஆர்.பிரதீபா தனது வார்டில் 2000ம் கொடிகளை வழங்கி உள்ளார். கொடிகளை மட்டும் வழங்காமல் வீடுகளில் கட்டுவதற்கு வசதியாக ரீப்பர் கட்டையில் கொடியை கட்டி, தன்னுடன் பேரூராட்சி கவுன்சிலர்களையும் அழைத்துச் சென்று வீடு வீடாக கொடிகளை கட்டி வைத்தார்.

இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கவுன்சிலர் பிரதீபா உடன் பேரூராட்சி தலைவர் பி.சுந்தரியும், நிர்வாக அலுவலர் சுப்பிரமணி உட்பட பலர் உடன் சென்றனர். தலைவர், சுந்தரி பேரூராட்சி முழுக்க அனைத்து வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டு வருகிறது எனக்கூறினார்.

Updated On: 13 Aug 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  4. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  6. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  7. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  9. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை