Begin typing your search above and press return to search.
தேனி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்றால் பெரிய பாதிப்பு இல்லை
Corona Today News - தேனி மாவட்டத்தில் இரண்டு நாளில் மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.
HIGHLIGHTS
Corona Today News -தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. நேற்றும், இன்றும் மட்டும் 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 40ஐ தாண்டி விட்டது. ஆனால் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இரண்டே பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் நல்ல நிலையில் உள்ளனர். இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய அளவில் உடல் உபாதைகளை ஏற்படுத்தவில்லை. தடுப்பூசி போட்டவர்கள் உடல் உபாதைகள் இன்றி தப்பி விடுகின்றனர். தடுப்பூசி போடாதவர்களுக்கு தொற்று பாதித்தால் உயிரிழப்பு வரை கொண்டு சென்று விடும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2