Begin typing your search above and press return to search.
தேனி மாவட்டத்தில் கொரோனா: நேற்று ஜீரோ இன்று ஒரு நபர் பாதிப்பு
மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளபோதும் சளி, காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
HIGHLIGHTS
தேனி மாவட்டத்தில் இன்று ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 859 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 5 நாட்கள் சைபர் தொற்றும் (யாருக்கும் கண்டறியப்படவில்லை), இதர நாட்களில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும், தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் சளி, காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.