/* */

பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

முல்லைபெரியாறு அணை நீர் கடந்த இரண்டு நாட்களாகவே 135.90 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
X

முல்லைப்பெரியாறு அணை.

முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அணை நீர் மட்டம் 136.30 அடியை எட்டினால் கேரளா வழியாக நீர் திறக்க வேண்டும். தமிழகம் வழியாக குறிப்பிட்ட அளவு மட்டுமே நீர் எடுக்க முடியும். ரூல்கர்வ் அமல்படுத்த தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்த நிலையில், மழை குறைய தொடங்கியது. இதனால் நீர் வரத்தும் குறைந்தது. இதனை தொடர்ந்து நீர் மட்டம் கடந்த இரண்டு நாட்களாகவே 135.90 அடி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1879 கனஅடி நீர் வருகிறது. வரும் நீர் முழுக்க தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையில் பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையினை அமல்படுத்தக்கூடாது என இந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 July 2022 3:17 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  2. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  3. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  4. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  5. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  6. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  7. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  8. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  9. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  10. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?