/* */

தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை

தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை அதிகமாக நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை
X

தமிழகத்தில் அனுமதியற்ற மதுபானக்கடைகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக சந்து, சந்துக்கு மதுவிற்கும் கடைகள் தமிழகத்தில் அதிகரித்து விட்டன என முன்னாள் முதல்வர் எடப்பாடியார் புகார் தெரிவித்திருந்தார். அவர் கூறியது உண்மை தான். தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் சந்துக்கடைகள் அதிகம் என ஒரு கணக்கெடுப்பே நடத்தலாம். குறிப்பாக தேனியில் பழைய பஸ் நிலயைம் மற்றும் புதிய பஸ் நிலையங்களில் மிக அதிகமாக உள்ளன.

புதிய பஸ்ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள சந்துக்கடைகளில் மட்டும் தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. பழைய பஸ்ஸ்டாண்ட் எதிரே பாரம்பரியமாகவே நடந்து வரும் சந்துக்கடை என்ற பெருமை பெற்ற சந்துக்கடை நடக்கிறது. தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் தலைமையில் மாவட்டம் முழுவதும் மட்டுமல்ல, மாவட்ட தலைநகரிலாவது சந்துக்கடைகளை கட்டுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Updated On: 22 May 2022 4:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்