Begin typing your search above and press return to search.
தேனி மாவட்டம் போடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
தேனி மாவட்டம் போடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது
HIGHLIGHTS
தேனி மாவட்டம், போடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போடி நகராட்சி ஆணையாளர் ஷகிலா கடந்த 4 நாட்களுக்கு முன்னரே பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் நகர் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, இன்று மதியம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கின. போடி புதுார் முதலாவது வார்டில் தொடங்கி கட்டபொம்மன் சிலை வரை இருந்த ரோட்டோர ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன. தொடர்ச்சியாக இப்பணிகள் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.