/* */

அணைப்பிள்ளையார் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு நீர் திறப்பு

தேனி மாவட்டம், போடி அணைப்பிள்ளையார் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வறண்டு போனதால் மீன்கள் செத்து மிதந்த போடி மீனாட்சிபுரம் கண்மாய்க்கு கொட்டகுடி ஆற்றில் அணைப்பிள்ளையார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

போடி கொட்டகுடி ஆற்றின் குறுக்கே அணைப்பிள்ளையார் கோயில் அணை உள்ளது. இங்கிருந்து போடி மீனாட்சிபுரம் கண்மாய்க்கு நீர் செல்லும். ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் வறண்டதால், மீன்கள் செத்து மிதந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கொட்டகுடி ஆற்றில் அணைப்பிள்ளையார் கோயில் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். கொட்டகுடி ஆற்றில் குறைந்த நீர் வரத்து உள்ளதால், பொக்கலைன் மூலம் சிறு கால்வாய் போல் வெட்டி கண்மாய்க்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஓரிரு நாளில் கண்மாய் நீர்மட்டம் ஒரளவு திருப்தியான உயரத்தை எட்டி விடும். எனவே மீன்கள் இறப்பது தடுக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 5 Oct 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்