/* */

மிட்டாய் தயாரிக்க சொன்னதால் பொறியியல் பட்டதாரி தற்கொலை

பொறியியல் படித்த தன்னை வேலைக்கு அனுப்பாமல், பொறிகடலை மிட்டாய் தயாரிக்க சொன்னதற்கு வருத்தமடைந்த பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

மிட்டாய் தயாரிக்க சொன்னதால் பொறியியல் பட்டதாரி தற்கொலை
X

பைல் படம்.

போடி தர்மத்துப்பட்டி கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் மகன் சூர்யா, 23. இவர் பொறியியல் படிப்பு முடித்துள்ளார்.

வெளியூரில் வேலைக்கு விண்ணப்பித்திருந்த அவருக்கு வேலையும் கிடைத்து விட்டது. அதற்காக அவர் ஊருக்கு கிளம்ப திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது தந்தையும், குடும்பத்தினரும், தங்களது குடும்ப தொழிலான மிட்டாய் தயாரிக்கும் தொழிலை நீ தான் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் அவர் வெளியூருக்கு வேலைக்கு செல்லவும் சம்மதிக்கவில்லை. இதனால் தன்னைப்போய் பொறிகடலை மிட்டாய் உருண்டை விற்க சொல்கிறார்களே என மனம் உடைந்த சூர்யா, விஷம் குடித்தார்.

இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இது குறித்து . போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Jun 2022 11:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்