/* */

தேனியில் போலீஸ் தாக்கியதாக கூறி வாலிபர் மருத்துவமனையில் அனுமதி

போலீஸ் தாக்கியதாக கூறி டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர், தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

தேனியில் போலீஸ் தாக்கியதாக கூறி  வாலிபர் மருத்துவமனையில் அனுமதி
X

போலீஸ் அடித்து துன்புறுத்தியதாக கூறி தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாலிபர் சதீஷ்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ், இவர், சந்தகேத்தின் அடிப்படையில் கோம்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை போலீஸ் காவலில் வைத்து அடித்துள்ளனர்.

இதனால் பலத்த காயம் அடைந்ததாக கூறி சதீஷ் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சதீஷ் கூறியதாவது: நான் என் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கோம்பைக்கு சென்றேன். அப்போது போலீசார் என்னை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். ஸ்டேஷனில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்தனர். நெஞ்சு, வயிறு பகுதியில் ஷூ காலால் கடுமையாக உதைத்தனர்.

இதில் நான் ரத்தவாந்தி எடுத்தேன். பலத்த காயத்துடன் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உறவினர்கள் கோம்பை போலீசார் மீது கலெக்டரிடம் புகார் செய்துள்ளனர் என்றார்.

Updated On: 17 Oct 2021 10:02 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?