/* */

பெரியகுளம் தாலுகாவில் நடந்ததைப் போல் போடி தாலுகாவிலும் நிலமோசடி புகார்

போடி தாலுகா அலுவலகத்தில் நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் நிலங்கள் வழங்கிய ஆணவங்கள் காணவில்லை என விவசாயிகள் புகார்

HIGHLIGHTS

பெரியகுளம் தாலுகாவில் நடந்ததைப் போல்  போடி தாலுகாவிலும் நிலமோசடி புகார்
X

பைல் படம்

பெரியகுளம் தாலுகாவில் பலநுாறு ஏக்கர் அரசு தரிசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்ததை போல் போடி தாலுகாவிலும் நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

பெரியகுளம் தாலுகாவில் பலநுாறு ஏக்கர் அரசு தரிசு நிலங்கள் தனியாருக்கு பட்டா போட்டு தாரை வார்க்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை அதிரடியாக மீட்ட கலெக்டர் மோசடியில் ஈடுபட்ட இரண்டு தாசில்தார் உட்பட 8 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளார். தற்போது பெரியகுளம் தாலுகாவில் போலி பட்டா வழங்கிய விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போடி பகுதி விவசாயிகள் தேனி கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பெரியகுளம் தாலுகாவில் நடைபெற்றதை போல், போடி தாலுகாவிலும் மோசடி நடைபெற்றுள்ளது. குறிப்பாக போடி, வடக்குமலை, ஊத்தாம்பாறை, அகமலை, கொட்டகுடி, சிலமலை, ராசிங்காபுரம் கிராமங்களில் நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலங்களுக்கான ஆவணங்கள் முழுமையாக காணாமல் போய் உள்ளன. இந்த ஆவணங்களை தேடி கண்டுபிடித்தால், பல நுாறு ஏக்கர் நில மோசடி தெரியவரும். கலெக்டர் இந்த பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Updated On: 13 Oct 2021 11:01 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!