/* */

கேரளாவில் மீண்டும் ஒலிக்க தொடங்கியது பெரியாறு அணை குறித்த அபாய எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்னரே கேரளாவில் முல்லைப்பெரியாறு குறித்த அச்சங்களை மக்களிடம் பரப்ப தொடங்கி உள்ளனர்.

HIGHLIGHTS

கேரளாவில் மீண்டும் ஒலிக்க தொடங்கியது  பெரியாறு அணை குறித்த அபாய எச்சரிக்கை
X
முல்லை பெரியார் அணை (பைல் படம்).

முல்லைப்பெரியாறு அணையில் நீர் மட்டம் 131 அடிக்கும் மேலே உள்ளது. இன்று அணையில் இருந்து தேனி மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கி விட்டதால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட இடுக்கி மாவட்ட நிர்வாகம் அணை பற்றிய தவறான தகவல்களை மக்களிடம் பரப்ப தொடங்கி விடுகிறது.

தண்டோரா போட்டு மக்களிடம், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் வெள்ளம் வர வாய்ப்பு உள்ளது. அணை எப்போதும் திறக்கப்படலாம் எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என அபாய எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வண்டிப்பெரியாறு, சப்பாத்து, வல்லக்கடவு, ஏலப்பாறை பகுதியில் இப்படி தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது.

இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கூட வாட்சாப், பேஸ்புக், டுவிட்டரில் வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பி (புலம்பி) வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் பெரியாறு அணை பற்றிய ஒரு தவறான தகவல்களை பரப்ப கேரளா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கேரளாவில் இந்த தவறான பிரச்சாரங்களை கண்டித்து, பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

Updated On: 1 Jun 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  3. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  7. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  8. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  9. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  10. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...